கிருஷ்ணகிரியை அடுத்த குருபரப்பள்ளியில் சரக அளவிலான சதுரங்கப் போட்டி அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சரக அளவிலான போட்டி குருபரப்பள்ளி கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. கொரல்நத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் கலாவதி போட்டியை தொடக்கிவைத்தார். சூளகிரி சரகத்துக்கு உள்பட்ட 11, 14, 17, 19 வயது பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.நடுவர்களாக உடற்கல்வி ஆசிரியர்கள் சிவபிரகாஷ், முருகன், செந்தில் குமார், மேரிபரிமளம், லட்சுமி ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், இவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றனர். போட்டியை உடல்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஒருங்கிணைத்தார்.