சிறுமி பாலியல் பலாத்காரம் வழக்கில் இளைஞருக்கு 8 ஆண்டுகள் சிறை 

தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் 15 வயது சிறுமி, கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் 20-ஆம் தேதி வீட்டில் தனியாக சமையல் செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (25) என்பவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை அனைத்து காவல் நிலைய ஆய்வாளர் ஆர்.புவனேஸ்வரி வழக்குப் பதிந்து, சிவக்குமாரை கைது செய்தார்.
 இது தொடர்பான வழக்கு, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிவக்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக ஓராண்டு சிறைத் தண்டனை என 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால், மேலும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் சி.கலையரசி ஆஜரானார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com