ஒசூரில் தொழிலாளியைத் தாக்கியதாக மூவரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூர் சானசந்திரம் காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன் (44), மாதப்பா (40), ராஜா (25). இவர்கள் ஜேசிபி வாகன உரிமையாளர்கள். இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த வீரண்ணா (35) என்பவர் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் சம்பளம் ரூ.500 கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முருகன் உள்பட மூவரும் தர மறுத்ததுடன் அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வீரண்ணா ஒசூர் நகரக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முருகன், மாதப்பா, ராஜா ஆகியோரை கைது செய்தனர்.