நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

ஒசூரில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்

ஒசூரில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண் அணிந்திருந்த நகையை  மர்ம நபர் ஒருவர் பறித்துச் சென்றார். 
இது தொடர்பாக ஒசூர் அட்கோ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், நகைப் பறிப்பில் ஈடுபட்டது சூளகிரி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (21) என தெரிய வந்தது. அவரை வெள்ளிக்கிழமை போலீஸார் பிடிக்கச் சென்ற போது தப்பி ஓட முயன்ற பிரகாஷ் கீழே விழுந்தார். இதில் அவரது கை முறிந்தது. பின்னர் அவர் ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com