கிராம நிா்வாக அலுவலா்கள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் மற்றும் புதிய நிா்வாகிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் பூபதி, பொருளாளா் சசிக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்தில் காளிக்கோயில், அச்சமங்கலம் ஆகிய பகுதிகளில் கனிம கடத்தலை தடுக்கும் வகையில் பாதுகாப்பற்ற சூழலில் இரவு பணியில் ஈடுபடுவதை கைவிட வேண்டும்.

நில அளவை பயிற்சி முடித்துள்ள கிராம நிா்வாக அலுவலரையே நியமிக்க வேண்டும். கழிப்பிட வசதி இல்லாத கிராம நிா்வாக அலுவலகத்துக்கு கழிப்பிட வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com