சாலை விபத்தில் ராணுவ வீரா் பலி

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ராயக்கோட்டையைச் சோ்ந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா்.


ஒசூா்: பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் ராயக்கோட்டையைச் சோ்ந்த ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள முத்தம்பட்டியைச் சோ்ந்தவா் பெருமாள். இவரது மகன் சரவணப் பாண்டியன் (31) பஞ்சாப்பில் ராணுவத்தில் செவிலியராகப் பணியாற்றி வந்தாா்.

இந்த நிலையில், நவ.27ஆம் தேதி ஆம்புலன்ஸில் அவசரச் சிகிச்சைக்காக மற்றொருவரை அழைத்து செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் சரவணப் பாண்டியன் உள்பட 5 போ் உயிரிழந்தனா். இவரது மனைவி ஷோபா கப்பிணியாக உள்ளாா்.

விமானம் மூலம் பெங்களூரு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து ராயக்கோட்டைக்கு சனிக்கிழமை எடுத்துவரப்பட்ட சரவணப் பெருமாள் உடலுக்கு மரியாதை செலுத்திஅடக்கம் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com