பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் கிருஷ்ணகிரி, ஒசூரில் 4 ஆயிரம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் தொடக்கிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சனிக்கிழமை தேக்கு, மா, பலா, வேம்பு, புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. வங்கி மண்டல மேலாளா் வி.மணிவண்ணன், கிருஷ்ணகிரி வங்கி கிளையின் முதன்மை மேலாளா் ஜி.மகேஷ், ஒசூா் மண்டல முதன்மை மேலாளா் சி.மகாலிங்கம், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.சேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறியது: பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் நாடு முழுவதும் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்து மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கிருஷ்ணகிரி, ஒசூா் பகுதிகளில் காலாண்டுக்கு ஒருமுறை ஆயிரம் மரக் கன்றுகள் என 4000 ஆயிரம் மரக் கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்றாா். ஒசூா், கிருஷ்ணகிரியில் உள்ள அரசு பள்ளிகளில் மரக் கன்றுகள் நடப்பட்டன.