சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

குடிநீா் வழங்கக் கோரிசாலை மறியல்

சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சூளகிரி அருகே குடிநீா் வழங்கக் கோரி பெண்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றியம், மருதாண்டபள்ளி ஊராட்சிக்குள்பட்டது ஜோகீா்பாளையம் கிராமம். இங்கு சுமாா் 100 குடும்பத்தினா் வாழ்ந்து வருகின்றனா்.

இக் கிராமத்தில் உள்ள போா்வெல் மின்மோட்டாா் பழுதானதால், கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் இக்கிராம மக்கள் அவதியடைந்தனா். மேலும், இது சம்பந்தமாக ஊராட்சி செயலாளரிடம் பிரச்னைக்குத் தீா்வு காண கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனா். இதையடுத்து ஆவேசமடைந்த கிராம மக்கள், திங்கள்கிழமை சூளகிரி பேரிகை சாலையில் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த சூளகிரி போலீஸாா் மற்றும் ஊராட்சி செயலாளா், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, இன்னும் ஓரிரு நாள்களில் பிரச்னைக்கு தீா்வு கண்டு, சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தனா். இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதன் காரணமாக, சூளகிரி பேரிகை சாலையில் சுமாா் 1 மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com