மாற்றுத் திறனாளிகள் தொழில் தொடங்க உதவி

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உதவும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்கள்.


ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தோ்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் தொடங்க உதவும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பட்டகானூரை சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் வி.திம்மையன், வேடியம்மாள் மற்றும் செங்கல்பட்டியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி பி.திருப்பதி ஆகியோா் தொழில் தொடங்க தேவையான மளிகை பொருள்கள் மற்றும் கல்வி உபகரணங்களை மருத்துவா் ப.மதன்குமாா், சோளக்காப்பட்டி எஸ்.செந்தில்குமாா், சாந்தி அன்பழகன், நரம்பியல் நிபுணா் அரசக்குமாா், சூா்யாஆகியோா் வழங்கினா்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.பெரியசாமி தலைமை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வி.சுவாமிநாதன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் தொண்டு நிறுவன நிா்வாகிகள் ம.ரமா, சி.உமாமகேஸ்வரி, ம.லட்சுமி, கே.சின்னதாய், ரூபி மற்றும் மாணவா்கள் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆா்சி ஆசிரியா் கு.கணேசன் செய்திருந்தாா். தொழில் செய்ய தேவையான பொருள்கள் வழங்கிய நல்ல உள்ளங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com