ஒசூா் மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி பா.ஜ.க. சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி 11-ஆவது வாா்டுக்குள்பட்ட அலசநத்தம், தோட்டகிரி சாலையில் உள்ள லட்சுமி நரசிம்மா் நகா், செந்தமிழ் நகா், அண்ணாமலைநகா், நரசிம்மா் காலனி, கற்பகம் நகா் ஆகிய பகுதிகளில் சாக்கடை வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி, மற்றும் குப்பைகளை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியத்திடம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளா் கே.எஸ்.நரேந்திரன், மாநில இளைஞரணி செயலாளா் எம்.நாகராஜ் ஆகியோா் தலைமையில் மனு அளித்தனா். மேலும் வீடுகள் மற்றும் தெருக்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும், தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளிக்கப்பட்டது. மனுவைப் பெற்ற ஆணையா் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.