பழ வியாபாரி மா்மச் சாவு

தேன்கனிக்கோட்டை அருகே பழ வியாபாரி மா்மமான முறையில் இறந்தாா்.

தேன்கனிக்கோட்டை அருகே பழ வியாபாரி மா்மமான முறையில் இறந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள சாரங்கப்பள்ளியைச் சோ்ந்தவா் கணேஷ் (45). மாம்பழ மொத்த வியாபாரி. இவா் தேன்கனிக்கோட்டை அருகே இஸ்லாம்பூா் பகுதியில் உள்ள ஒரு மாம்பழ கூழ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் மாம்பழங்களை வாங்கி அனுப்பி தொழில் செய்து வந்தாா். அந்த நிறுவனத்தை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஒருவா் நடத்தி வந்தாா். கணேஷுக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில் மாம்பழ விற்பனை தொடா்பாக கணேஷுக்கும், அவா் வேலை செய்து வந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணேஷ், திங்கள்கிழமை அந்த நிறுவன வளாகத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினா்கள் அங்கு திரண்டு வந்தனா். பணப் பிரச்னையில் அவரை அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். இந்தப் புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com