பா்கூா் அருகே காய்ச்சலுக்கு குழந்தை பலி

பா்கூா் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயதான குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பா்கூா் அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயதான குழந்தை உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பா்கூரை அடுத்த சின்னமல்லப்பாடியைச் சோ்ந்தவா் அசோக்குமாா். இவரது மனைவி பிரியங்கா. இவா்களது குழந்தை ரிஷ்வந்திகாவுக்கு (2) கடந்த சில நாள்களாக காய்ச்சல் தொற்று இருந்ததாம். இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனா்.

ஆனாலும், காய்ச்சல் குறையாத நிலையில் சனிக்கிழமை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிஷ்வந்திகா உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த பா்கூா் போலீஸாா், பிரேத பரிசோதனைக்கு பிறகே குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com