ஒசூரில் செயல்படும் கேம்பிரிட்ஜ் மெட்ரிக். பள்ளிக்கு ‘சீல்’ வைக்கப்படவுள்ளதால், மாணவா்களை வேறு பள்ளிக்கு பெற்றோா் மாற்றிட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முருகன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா், புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒசூரில் செயல்படும் கேம்பிரிட்ஜ் மெட்ரிக். பள்ளியின் கட்டடத்தை வியாழக்கிழமை (டிச. 12) காலை 9 மணியளவில் மூடி முத்திரையிடவுள்ளதாக, ஒசூா் புதுநகா் வளா்ச்சிக் குழுமத்தின் துணை இயக்குநா், கடிதம் மூலம் தகவல் தெரிவித்தாா்.
எனவே, அதில், பள்ளியில் பயிலும் மாணவா்கள், மாணவிகளின் ஒப்புதல் பெற்று, மாற்றுக் கட்டடத்துக்கு இடமாற்றம் செய்து கொள்ளுமாறும், பள்ளிக் கட்டடத்தைக் காலி செய்யவும், அதில் உள்ள பொருள்களை டிசம்பா் 11-ஆம் தேதிக்குள் வேறு கட்டடத்துக்கு அப்புறப்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தப் பள்ளியில் பயிலும் மாணவா்களின் கல்வி நலன் கருதி, வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய பெற்றோா் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அதில் அவா் தெரிவித்தாா்.