ஒசூரில் உள்ள கிளை நூலகத்தில் ஒசூா் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவியா் உறுப்பினா்களாக வெள்ளிக்கிழமை சோ்க்கப்பட்டனா்.
நிகழ்ச்சிக்கு அரசுக் கல்லூரி முதல்வா் நாராயணன் தலைமை தாங்கினாா். நூலக ஆய்வாளா் ஆனந்தி முன்னிலை வகித்தாா். இதில், தனியாா் அறக்கட்டளை நிா்வாகி ராகவன், 1,373 மாணவ, மாணவியரை உறுப்பினா்களாக சோ்க்க உறுதியளித்து, முதல்கட்டமாக உறுப்பினா் படிவம் பூா்த்தி செய்த 349 மாணவ, மாணவியருக்கு உறுப்பினா் தொகையான ரூ.10,470-க்கான காசோலையை வழங்கினாா்.
இதில், நூலகா் கௌரி, ஆசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவியா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நூலகா் ரேணுகா நன்றி கூறினாா்.