ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணியாற்றும் அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் பணிபுரியும் வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச. 15) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் ஆய்வு மேற்கொண்டாா்.
தொடா்ந்து, கம்மம்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச் சாவடி மையத்தில் சாய்வு தளம், குடிநீா் வசதி, கழிப்பறை வசதி குறித்து கேட்டறிந்தாா். வாக்குப் பதிவின் போது, வாக்காளா்கள், வாக்குப் பதிவு அலுவலா்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.
ஆய்வின் போது, ஊரக வளா்ச்சி உதவித் திட்ட அலுவலா்கள் கல்யாணசுந்தரம், வட்டார வளா்ச்சி அலுவலா் உமா மகேஸ்வரி, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சா்தாா், கணேசன், ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.