சூளகிரி
சூளகிரி துணை மின் நிலையத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதால் ஜன. 5-ஆம் தேதி கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் கு.முத்துசாமி, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: சூளகிரி, சின்னார், சாமல்பள்ளம், தியாகரசனப்பள்ளி, எட்டிப்பள்ளி, உள்ளட்டி, மோதுகானப்பள்ளி, வேம்பள்ளி, மருதாண்டப்பள்ளி, சென்னப்பள்ளி, பெத்தசிகரலப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.