தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு

போச்சம்பள்ளியில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

போச்சம்பள்ளியில் தேமுதிக கட்சி அலுவலகம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமைக் கழகப் பேச்சாளர் பரமசிவம் தலைமை வகித்தார். ஒன்றிய துணைச் செயலர் அப்பாதுரை முன்னிலை வகித்தார். நகரச் செயலர் அன்பு வரவேற்றார். மாவட்டச் செயலர் அன்பரசு கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, பூத் கமிட்டி அமைத்தல், புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில், தொகுதி பொறுப்பாளர் மதியழகன், ஒன்றியச் செயலர்கள் சுந்தரராஜன், தீத்தான், அவைத் தலைவர்கள் ரமேஷ், குமரேசன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். முன்னாள் துணைத் தலைவர் முருகன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com