மேகலசின்னம்பள்ளியில் நடைபெற்ற விழாவில், விலையில்லா மிதிவண்டிகளை கே.அசோக்குமார் எம்.பி. வியாழக்கிழமை வழங்கினார்.
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், மேகலசின்னம்பள்ளியில் உள்ள காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு, பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கே.அசோக்குமார் எம்.பி., 125 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில் தலைமையாசிரியர் ரவி, கூட்டுறவு வங்கித் தலைவர் வெங்கடராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.