ஒசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் 27-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பெங்களூரைச் சேர்ந்த விஞ்ஞானி கே.வி.எஸ்.சாலமையா சாஷ்திரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அதியமான் கல்லூரி முதல்வர் முனைவர் ஜி.ரங்கநாத் தலைமை வகித்தார்.
அதியமான் கல்லூரிப் பேராசிரியர் பத்ரிநாராயணன் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் 1,802 இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கம், ரொக்கப் பணம் வழங்கப்பட்டன.