ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிய பெங்களூரைச் சேர்ந்த இளைஞரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூரில் உள்ள மென் பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெங்களூரு கே.ஜி அள்ளி பகுதியைச் சேர்ந்த ஜெக்கி மகன் கிரிஸ்டோபர்(21) தனது நண்பர்கள் 10 பேருடன் ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் வந்து ஆலாம்பாடி பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் கிரிஸ்டோபர் அடித்துச் செல்லப்பட்டார். இதுகுறித்து நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலைத் தேடி வருகின்றனர்.