வேப்பனஅள்ளியில் தி.மு.க. சார்பில் சமத்துவப் பொங்கல் விழா, திங்கள்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகு உறுப்பினர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு கிருஷ்ணகிரி தி.மு.க. மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் முருகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். கரும்பு, மாவிலை தோரணம், மஞ்சள் பயிர் வைத்து புது பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து சமத்துவப் பொங்கல் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் அவைத் தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைத் தலைவர் அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.