ஒசூர் உழவர்சந்தை அருகே 2 மாதமே ஆன பெண் குழந்தை ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
ஒசூர் உழவர்சந்தை அருகே இரண்டு மாதமே ஆன பெண் குழந்தை அழுது கொண்டே இருந்தது. சத்தம் கேட்டு அங்கு வந்த மக்கள் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் அந்தக் குழந்தை ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. ஒசூர் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து குழந்தையை விட்டுச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.