ஊத்தங்கரை காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு ஊத்தங்கரை டி.எஸ்.பி. ராஜபாண்டியன் தலைமை வகித்தார். ஊத்தங்கரை காவல் ஆய்வாளர் ராமமூர்த்தி, காவல் உதவி ஆய்வாளர்கள் அண்ணாமலை, கனிமொழி, சுப்பிரமணி, அன்பழகன் மற்றும் போலீஸார் முன்னிலை வகித்தனர்.
புதுபானையில் பச்சரிசி வைத்து பொங்கலிட்டு, மஞ்சள், செங்கரும்பை வைத்து, சூரிய பகவானை வழிபட்டு சமத்துவ பொங்கல் விழாக் கொண்டாடப்பட்டது. இதில் காவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.