கரகூர் மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை, திங்கள்கிழமை (ஜன.14) அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கரகூர் மகளிர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தச் சங்கத்தின் மகா சபைக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது. சங்கத்தின் தலைவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றக் இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவர் ராணி, இயக்குநர்கள் விஜயா, உமாராணி, கணகவள்ளி, கலைச் செல்வி, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உறுப்பினர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஊக்கத் தொகை வழங்கப்பட்டன.