போச்சம்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் மாட்டு பொங்கல் விழாவையொட்டி கால்நடைகளுக்கு சிறப்பு பூஜை செய்து பொதுமக்கள் வழிபட்டனர்.
போச்சம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழாவை பட்டிப்பொங்கல் எனவும் கிராமங்களில் அழைக்கின்றனர். விளை நிலத்தில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே இடத்தில் புது பானையில் பொங்கலிட்டும், கால்நடைகளுக்கு குளிப்பாட்டி சுத்தம் செய்து, அலங்கரித்தும், வர்ணம் பூசி அழைத்து வந்தனர்.
பின்னர், பொங்கல் வைத்து மாடு, ஆடு உள்ளிட்டவைக்கு பூஜைகள் செய்தனர். அங்கிருந்து கால்நடைகளை கோயிலுக்கு அழைத்து சென்று பூஜைகள் செய்து, மாடுகள் விடும் விழா நடந்தது.