கிருஷ்ணகிரி பழைய அரசு குடியிருப்பில் பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்றவர்களுக்கு டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் உள்ள பழைய அரசு குடியிருப்பு மற்றும் எல்.ஐ.ஜி. காலனியில் செயல்படும் அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மூன்று நாள்கள் நடைபெற்ற இந்த விழாவில், குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு டி.செங்குட்டுவன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.