அரசு தொகுப்பு வீட்டில் செயல்படும் மதுக் கடையை அகற்றக் கோரிக்கை

ஊத்தங்கரை அருகே காரப்பட்டி கிராமத்தில் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செயல்படும் மதுபானக் கடையை

ஊத்தங்கரை அருகே காரப்பட்டி கிராமத்தில் அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் செயல்படும் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
காரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் அளித்த,  மனுவில் தெரிவித்துள்ளது:  மக்கள் அதிக நடமாட்டம் உள்ள காரப்பட்டி பெரியார் நகரில்  அரசால் வழங்கப்பட்ட தொகுப்பு வீட்டில் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடையை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இத்தகைய நிலையில், மாவட்ட ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com