காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து சுடுகாட்டை மீட்டு, சுற்றுச்சுவர் கட்டித் தரக் கோரி, மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரிடம் லிங்காயத்தார் நலச் சங்கத்தினர், திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, அந்தச் சங்கத்தின் சார்பில் அளித்த மனுவின் விவரம்: காவேரிப்பட்டணம் நகரில், ஊர் பொது சுடுகாட்டுக்கு வடக்குத் திசையில் வீரசைவ லிங்காயத்து சமூகத்தினருக்கான சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை பலர் ஆக்கிரமித்து கட்டடங்களை கட்டியுள்ளனர். இதனால், எங்கள் சமூக மக்கள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்ய போதிய இடமில்லாமல் அவதிக்குள்ளாகி வருகிறோம்.
எனவே, எங்கள் சுடுகாட்டினை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு, சுற்றுச் சுவர் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.