பார்வைக் குறையுள்ள குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சேர்க்க அழைப்பு

பார்வைத் திறன் குறையுள்ள குழந்தைகளை பர்கூரில் உள்ள சிறப்புப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், அழைப்பு விடுத்துள்ளார்.

பார்வைத் திறன் குறையுள்ள குழந்தைகளை பர்கூரில் உள்ள சிறப்புப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர், அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து,  அவர், திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் அரசு நிதியுதவியுடன் ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான  பார்வைத்  திறன் குறையுடைய மாணவர்களைக் கொண்டு உண்டு உறைவிட வசதியுடன் ஐஇஎல்சி  பார்வைத் திறன் குறையுடையோருக்கான சிறப்புப் பள்ளி பர்கூரில் செயல்பட்டு வருகிறது.  
இந்தப்  பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும், இந்தப் பள்ளியில்  பயிலும் மாணவர்களுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் கல்வி உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. எனவே, இந்தப் பள்ளியில் பார்வைத் திறன் குறையுடைய மாணவர்களைச் சேர்த்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com