ஜூலை 13-இல் மக்கள் நீதிமன்றம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம், ஜூலை 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்கள் நீதிமன்றம், ஜூலை 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட நீதிமன்றம் சார்பில் புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், ஒசூர், போச்சம்பள்ளி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை  நீதிமன்ற வளாகங்களிலும் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் ஜூலை 13-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர் மீனா சதீஷ் தலைமையில் நடைபெற உள்ளது. 
இதில், வழக்காடிகள், வழக்குரைஞகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், வங்கிகள், தொழிலாளர் நல வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள சில பரஸ்பரம் பேசி தீர்வு காணக்கூடிய குற்றவியல் வழக்குகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அன்றைய தினமே தீர்வு காணப்படும். 
எனவே, வழக்குரைஞர்களும், பொதுமக்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தின் மூலம் சமரசமாக தீர்த்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com