கெலமங்கலத்தில் நகைக் கடை உரிமையாளரை கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது

கெலமங்கலத்தில் நகைக் கடை உரிமையாளரை கடத்திய வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

கெலமங்கலத்தில் நகைக் கடை உரிமையாளரை கடத்திய வழக்கில், மேலும் ஒருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கெலமங்கலத்தில் நகைக் கடை உரிமையாளர் பிரதாப்ராம் மகன் குமன்ராம் கடத்தல் வழக்கில், கெலமங்கலம் அருகே உள்ள போத்தசந்திரத்தைச் சார்ந்த கிருஷ்ணப்பா மகன் லோகேஷ் கைது செய்யப்பட்டார்.  இவர் கட்டப் பஞ்சாயத்து செய்து நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
இந்த வழக்கில் லிங்களைப்பட்டியைச் சேர்ந்த பிரபாகர்,  கொரட்டகிரியை சார்ந்த கிருஷ்ணப்பா ஆகியோர் ஏற்கெனவே குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறை சென்றுள்ளனர். இந் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதர் உத்தரவின் பேரில்,  தனிப்படை அமைத்து கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சிவலிங்கம் மற்றும் உதவி ஆய்வாளர் செல்வராகவன் ஆகியோர் தலைமறைவாகியுள்ள
குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com