போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் மின்கோட்ட அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அதன் செயற்பொறியாளர் தி.வேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்ட அலுவலகம், திருப்பத்தூர் பிரிதான சாலை வடமலம்பட்டி கிராமத்தில் உள்ள வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக, அதன் அருகாமையில் உள்ள கனரா வங்கி அமைந்துள்ள கட்டட வளாகத்தில் உள்ள முதல்தளத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. எனவே, ஜூலை 15-ஆம் தேதி முதல் போச்சம்பள்ளி மின்கோட்ட அலுவலகமானது மேற்கண்ட முகவரியில் செயல்படத் தொடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.