ஒசூரில் வட்டாரப் போக்குவரத்துத் துறை சார்பில் நடத்தப்பட்ட சோதனையில் வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒசூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் முதல்நிலை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் விஜய்குமார், தரணிதரன் ஆகியோர் ஒசூர் வட்டாட்சியர் அலுவலக சாலை, உழவர் சந்தை சாலை, இ.எஸ்.ஐ. உள்வட்டச் சாலை ஆகிய இடங்களில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது வாகன தகுதிச் சான்று புதுப்பிக்காமல், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 14 ஆட்டோக்கள், வரி செலுத்தாத 3 சரக்கு வாகனங்கள், ஒரு சுற்றுலா வாகனம் மற்றும் ராயக்கோட்டையில் 10 வாகனங்கள் என 29 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் ஒசூர், மத்திகிரி மற்றும் ராயக்கோட்டை காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டன.