மரக்கிளை முறிந்து விழுந்ததில் கார் சேதம்

கிருஷ்ணகிரி  நீதிமன்றம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது. 

கிருஷ்ணகிரி  நீதிமன்றம் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது. 
நாமக்கல் மாவட்டம்,  பரமத்தி வேலூர் அருகே உள்ள பாலப்பட்டியைச் சேர்ந்தவர் பிரபாகரன் (29). இவர் ஒரு வழக்கு தொடர்பாக, கிருஷ்ணகிரி நீதிமன்றத்துக்கு காரில் செவ்வாய்க்கிழமை வந்தார். காரை, நீதிமன்ற நுழைவாயில் எண் - 1 அருகே நிறுத்தியிருந்தார். 
இந்த நிலையில்,  அங்கிருந்த மரத்தின் கிளை முறிந்து காரின் மீது விழுந்தது. இதில், கார் சேதம் அடைந்தது. மரக்கிளை முறிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்த, கிருஷ்ணகிரி தாலுகா போலீஸார், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று, முறிந்து விழுந்த மரக் கிளையை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com