சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரியில் தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் உள்பட சாலை விதிமுறைகளை

கிருஷ்ணகிரியில் தலைகவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் உள்பட சாலை விதிமுறைகளை மீறியதாக 150 வழக்குகளை போலீஸார், செவ்வாய்க்கிழமை பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி நகரில் பள்ளி, அலுவலக நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறி வாகனங்களை அதி வேகமாகவும், சாலையில் செல்வோரை அச்சப்படுத்தும் வகையில் அதிக ஒலிகளை எழுப்பி வாகனத்தை இயக்குவதாகவும் பல்வேறு புகார்கள் காவல் துறையினருக்கு வந்தன. இதையடுத்து, கிருஷ்ணகிரி நகரின் முக்கிய பகுதிகளில் போலீஸார், திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில், நடைபெற்ற இந்த வாகன சோதனையில் தலைகவசம் அணியாமல் சென்றவர்கள் மீதும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் சென்ற வாகன ஓட்டிகள் என சாலை விதிகளை மீறிய 150 பேர் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.  தலைகவசம் அணியாமல் சென்றவர்களிடம் அபராதம் வசூலித்து ரசீது வழங்கியும், அவர்களுக்கு தலைகவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்தும்
எடுத்துரைத்தனர்.  
மேலும், தொடர்ந்து, சாலை விதிமுறைகளை மீறுவோர் மீது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என காவல் ஆய்வாளர் பாஸ்கரன், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com