போச்சம்பள்ளியை அடுத்த மத்தூர் அருகே பெருகோபணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பெருக்கோபணப்பள்ளி கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இந்தக் கிராம மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது கால்வாய் மூலமாக கிருஷ்ணகிரி-திண்டிவனம்
தேசிய நெடுஞ்சாலை வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த கழிவுநீர் கால்வாய் கடந்த ஐந்து ஆண்டுகளாக சேதமடைந்துள்ளதால் கழிவு நீரானது தேசிய நெடுஞ்சாலையில் தேங்குவது குறித்து தினமணியில் செய்தி புதன்கிழமை படத்துடன் வெளியானது. இதைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் மூலமாக கழிவுநீர் கால்வாயை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.