பள்ளி சிறார்களுக்கு பகுதி நேர கலைப்பயிற்சி

கிருஷ்ணகிரியில் பள்ளி சிறார்களுக்கு அரசு சார்பில் பகுதி நேரக் கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரியில் பள்ளி சிறார்களுக்கு அரசு சார்பில் பகுதி நேரக் கலைப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் சு. பிரபாகர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
ஜவகர் சிறுவர் மன்றங்கள் மூலம் பள்ளி செல்லும், சிறார்களுக்கு கலைகளை பயிலும் வண்ணம் பகுதி நேர கலைப்பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளி வளாகத்தில் ஜவகர் சிறுவர் மன்றம் இயங்கி வருகிறது. இந்த மன்றத்தில் குரலிசை, பரதநாட்டியம், யோகா, ஓவியம் ஆகிய கலைகளில் சனிக்கிழமை மதியம் 2 முதல் 4 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரையிலும், கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
5 முதல் 16 வயது வரையில் உள்ள சிறுவர், சிறுமியர் இந்தப் பயிற்சியில் சேரலாம். இந்தப் பயிற்சிக்குக் கட்டணம் இல்லை. சிறுவர் மன்ற உறுப்பினராகப் பதிவு செய்வதற்கு ஆண்டு சந்தா ரூ. 300 செலுத்த வேண்டும்.
ஜூன் 22-ஆம் தேதி பகல் 2 மணிக்கு பகுதி நேர பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. பயிற்சி 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதிவரையில் நடைபெறும். 
இந்த மன்றத்தில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறார்கள், மாவட்டம், மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், கருத்தரங்கம், செயல் முறை பயிலரங்கம் ஆகியவைகளில் கலந்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
பயிற்சியில் சேருவதற்கான பதிவு தொடங்கி உள்ளது. மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலரை 9500388896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com