கிருஷ்ணகிரியில், மத்திய அரசைக் கண்டித்து, எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா) கட்சி சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர் பேருந்து நிலையம் அருகே, நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் அஸ்கர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, செயலாளர்கள் ஜப்பார், கலீல், பொருளாளர் சௌகத் அகமத், தலைவர் முகமது கலீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்துக்கு எதிராக அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், கெயில், நியூட்ரினோ போன்ற திட்டங்களை நிறைவேற முயலும் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் முழக்கங்களை எழுப்பினர்.