காவேரிப்பட்டணம்
கிருஷ்ணகிரி மின் கோட்டத்துக்கு உள்பட்ட பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், குட்டிக்கவுண்டனூர் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை 9 முதல் மாலை 5 மணி வரையில் மின்நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ப.ராஜதுரைபாண்டி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: காவேரிப்பட்டணம், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், வீட்டுவசதி வாரியம், ஜெகதாப், சவுளூர், சந்தாபுரம், பாளையம், மில் ரோடு, நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூர், கருக்கன்சாவடி, மேல்மக்கான், சாலாமடுவு, இந்திராநகர், சாப்பர்த்தி, இ.ஜி.அள்ளி, மோரனஅள்ளி, புங்கம்பட்டி, குண்டாங்காடு, மேட்டுப்பள்ளம், கொத்தலம், தளியூர், தொட்டிப்பள்ளம், அங்கினம்பட்டி, பன்னிஅள்ளி, கதிரிவுரம், குட்டிக்கவுண்டனூர் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.