மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் விருதுகளைப் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக சேவையாற்றிய நிறுவனங்கள், சிறந்த மருத்துவர், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சமூக பணியாளர், அதிக அளவில் கடன் வழங்கிய கூட்டுறவு வங்கி போன்ற சேவை செய்தவர்களுக்கு தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அறை எண் 23-இல் செயல்படும் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பத்தை நிறைவு செய்து, ஜூலை 5 - ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.