கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் கட்செவி அஞ்சல் எண் 6369700230-இல் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் கோரும் உதவிகளை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தளத்தில் இயங்கிவரும் அவசர கால கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண், கட்செவி எண் ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இதில் குடிநீர் தேவை, சாலை வசதி, மின் விளக்கு பயன்பாடு உள்ளிட்ட புகார்களை பொதுமக்கள் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்ணை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, கட்செவி தொடர்புக்கு 6369700230 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.