ஒசூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக எஸ்.ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி(43) போட்டியிடுகிறார்.
இவர், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் மாநில இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டியின் மனைவி. இவர் பி.எஸ்சி. பி.எட்., படித்துள்ளார். கர்நாடக மாநிலம், கோலார் அருகேயுள்ள கேசம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த இவர், கர்நாடக மாநில முதலாவது முதல்வர் கே.சி. ரெட்டியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி, கடந்த 2006 ஆம் ஆண்டு ஒசூர் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பணியாற்றியுள்ளார். தற்போது இவர்கள் ஒசூர் அருகே ஜீமங்கலம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.