முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி
கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றிய தனியார் பள்ளி ஆசிரியர் கைது
By DIN | Published On : 18th May 2019 08:54 AM | Last Updated : 18th May 2019 08:54 AM | அ+அ அ- |

கல்லூரி மாணவியை காதலித்து ஏமாற்றி, வேறு திருமணம் செய்த தனியார் பள்ளி ஆசிரியரை பென்னாகரம் மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கூத்தபாடி ஊராட்சிக்குள்பட்ட கே.குள்ளாத்திரம் பட்டி பகுதியைச் சேர்ந்த மாவட்டன் மகன் திருமாறன் (24), ஏரியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவியும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கல்லூரி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகி வந்த நிலையில், கடந்த புதன்கிழமை திருமாறனுக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.
இதனை அறிந்த கல்லூரி மாணவி, வியாழக்கிழமை பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மகளிர் காவல் ஆய்வாளர் லதா வழக்குப் பதிவு செய்து, திருமாறனை கைது செய்து சிறையில் அடைத்தார்.