கலந்தாய்வு மூலம் பணி மாறுதல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில பொதுச் செயலர் கோவிந்தராஜ், மாவட்டத் தலைவர்கள் பழனியம்மாள், மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில், பணியாளர் பணி மாறுதல்களை கலந்தாய்வு மூலம் நடத்த வேண்டும். பணியாளர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.