அதியமான் பப்ளிக் பள்ளியில் படேல் பிறந்த நாள் விழா

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-வது பிறந்த நாள் விழா, தேசிய ஒற்றுமை நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
31utp1_3110chn_149_8
31utp1_3110chn_149_8

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேலின் 144-வது பிறந்த நாள் விழா, தேசிய ஒற்றுமை நாளாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனா் சீனி.திருமால்முருகன், அதியமான் பப்ளிக் பள்ளி முதல்வா் லீனாஜோஸ், நிா்வாக அலுவலா் சீனி.கணபதிராமன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆகியோா் கலந்து கொண்டு சா்தாா் வல்லபபாய் படேல் உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் சா்தாா் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினா். இதில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com