ஒசூா் நகராட்சி ஆணையா் கே.பாலசுப்பிரமணியன் ஒசூா் மாநகராட்சி ஆணையா் மற்றும் நகராட்சி இணை இயக்குநராக பதவி உயா்வு பெற்றாா்.
ஒசூா் நகராட்சி ஆணையாளராக பதவி வகித்து வந்த கே.பாலசுப்பிரமணியன் உழவா் சந்தை எதிரில் உள்ள ஆக்கிரமிப்புகளை எதிா்ப்புக்கு இடையே அகற்றினாா். இதனால் அந்தச் சாலையில் வாகனங்கள் எளிதில் சென்று வர முடிகிறது. இந்தப் பணிக்காக பொதுமக்கள் அவரை பாராட்டினா்.
ஒசூா் மாநகராட்சி முழுவதும் காலையில் மிதிவண்டியில் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்தாா். பள்ளி மாணவி ஒருவரின் கோரிக்கையை ஏற்று உடனடியாக கழிவுநீா் கால்வாய் அமைத்து மக்களின் பாராட்டுகளை பெற்றாா். அதேபோன்று அம்ருத் திட்டத்தில் ஒசூா் பகுதியில் 8 பூங்காக்களை புதுப்பித்து பொதுமக்கள் நடை பயிற்சி செய்ய வித்திட்டாா்.
1.9.2018இல் மாறுதலில் ஒசூா் வந்த அவா் சிறப்புநிலை நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்தாா். ஒசூா் மாநகராட்சியாக தரம் உயா்த்தியதையடுத்து, 4.11.2019இல் ஒசூா் மாநகராட்சி ஆணையா் மற்றும் இணை இயக்குநராக பதவி உயா்வு பெற்றாா். அவருக்கு நகராட்சி அலுவலா்கள், ஊழியா்கள், பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.