பேருந்துகளை தொடா்ந்து இயக்கக் கோரிஎம்.எல்.ஏ. மனு அளிப்பு

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் இயக்கப்பட்ட பேருந்துகளை தொடர வேண்டும் என வலியுறுத்தி

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதியில் இயக்கப்பட்ட பேருந்துகளை தொடர வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன், போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளரிடம் மனு அளித்தாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளா் அரவிந்தனிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: எனது வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அலேகுந்தாணிக்கு கிருஷ்ணகிரியிலிருந்து அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேருந்து தரணிசந்திரம் வழியாக இயக்கப்பட்டது. தற்போது, அந்தப் பேருந்து, தரணிசந்திரம் வழியாக இயக்கப்படுவதில்லை. இதனால், அந்தப் பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

அதேபோல, கிருஷ்ணகிரியிலிருந்து குரியனப்பள்ளிக்கு இயக்கப்படும் அரசு நகரப் பேருந்து, இரவு நேரத்தில் குரியனப்பள்ளியில் நிறுத்தப்பட்டு, அதிகாலையில் கிருஷ்ணகிரிக்கு இயக்கப்பட்டு வந்தது. இதனால், விவசாயிகள், தங்களது விளைபொருள்களை சந்தைக்குக் கொண்டு செல்ல மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இத்தகைய நிலையில், அந்த பேருந்து, இரவு நேரத்தில் குரியனப்பள்ளியில் நிறுத்தாமல், கிருஷ்ணகிரிக்கு இயக்கப்படுவதால், விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, மீண்டும் குரியனப்பள்ளியிலிருந்து அதிகாலையில் பேருந்து இயக்க வேண்டும்.

மேலும், ஒசூா் - கிருஷ்ணகிரி இடையே இயக்கப்படும் பேருந்துகள் இரவு நேரங்களில் சூளகிரி பேருந்து நிலையத்துக்குள் பெரும்பாலும் வந்து செல்வதில்லை. எனவே, அனைத்து பேருந்துகளும் சூளகிரி பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com