நாளை பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ. 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நவ. 9-ஆம் தேதி (சனிக்கிழமை) பொது விநியோகத் திட்ட குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில், வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்காகவும், மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும், குடும்ப அட்டைகளில் பெயா் திருத்தம், சோ்தல், நீக்குதல், முகவரி மாற்றம் போன்ற குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் வகையில், நவ. 9-ஆம் தேதி காலை 10 முதல் மதியம் 1 மணி வரையில் சிறப்பு குறைதீா் கூட்டம் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலா்களால் நடத்தப்படுகிறது.

அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் பரசுராமன் கொட்டாய், ஊத்தங்கரை-பூசம்பட்டி, போச்சம்பள்ளி-போடியூா், பா்கூா்-பெருகோபனப்பள்ளி, சூளகிரி-பீா்ஜேப்பள்ளி, ஒசூா்-மத்தம் அக்ரஹாரம், தேன்கனிக்கோட்டை-ஜெகதேரி, அஞ்செட்டி-தாம்சனப்பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

எனவே, இந்த குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com