கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, கரூா் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி-முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் அதனையொத்த பதவிகளில் பணியாற்றும் அலுவலா்களுக்கு பணியிட மாறுதல் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த கே.பி.மகேஸ்வரி, கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இவருக்குப் பதிலாக, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வரும் முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.