தளி அருகே அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தளி அருகே நெல்லுமாா் சாலையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் சுகந்தன் தளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.